சனி, 29 ஜூன், 2013

"மசாஜ்' செய்வதால் என்ன பயன்?


Click to visit the original post இயற்கை மருத்துவத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது மசாஜ். மசாஜ்க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா, சீனா, கிரீஸ், ரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மசாஜ், நோய் தீர்க்கும் ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மசாஜ் செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு எவ்வாறு நலம் பயக்கிறது என்பதை விரிவாக காண்போம்.
மசாஜ் செய்வதால், தோலில் ஏற்படும் நன்மைகள் ஏராளம். மசாஜ் செய்வதன் மூலம் தோலில் காணப்படும் துளைகள் விரிவடைந்து, உடலில் காணப்படும் தீய கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறி விடும். மசாஜ், தசைகளின் இறுக்கத்தை குறைத்து, தசை வலியை நீக்குகிறது. கடினமான வேலைகளால் உடல் தசைகளில், "லாக்டிக் ஆசிட்' சேரும். மசாஜ், தசைகளில் சேரும், "லாக்டிக் ஆசிட்'களை நீக்கி, உடலை புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருக்க உதவும்.
ரத்த ஓட்டம்: மசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், அவ்வுடல் உறுப்புகளுக்கு அதிகளவில் ஊட்டச்சத்து கிடைப்பதுடன், அந்த உறுப்புகளில் நோய் குணமாகும் தன்மையும் அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், வீக்கம் போன்றவை ஏற்படுவது குறையும். மசாஜ் செய்வதால் ரத்தத்தில் அதிகளவில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் மற்றும் அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.
நரம்பு: நரம்புகளில் குறைந்த அழுத்தத்துடன், மெதுவாக மற்றும் மிதமாக செய்யப்படும் மசாஜ், நரம்புகளில் காணப்படும் இறுக்கத்தை குறைத்து, அவற்றை மென்மையாக்கி. சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். நரம்புகளை இளக்கமடைய வைத்து அதன் ஆற்றலை அதிகரிக்கும்.
செரிமான மண்டலம்: வயிற்றில் மசாஜ் செய்வதால் செரிமான மண்டலம் தூண்டப்படுவதுடன், வயிற்றில் காணப்படும் கழிவுகளும் நன்கு வெளியேறும். மேலும் கல்லீரலின் ஆற்றல் அதிகரிப்பதால், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சிறுநீர் மண்டலம்: மசாஜ் செய்வது, சிறுநீர் மண்டலத்தை நன்கு செயலாற்ற தூண்டுகிறது. இதனால் அதிகளவில் சிறுநீர் உற்பத்தியாகி, அதன் மூலம் உடல் கழிவுகள் விரைவில் வெளியேறுகின்றன.
இதயம்: முறையாக செய்யப்படும் மசாஜ், இதயத்தில் ஏற்படும் பளுவை குறைத்து, அதன் செயல் திறனை அதிகரிக்கிறது. பொதுவாக, மசாஜ் செய்வதற்கு உலர்ந்த கைகளையே பயன்படுத்த வேண்டும்; ஆனால், உடல் அதிக வறட்சி தன்மை உடையதாக இருந்தால் அல்லது உடல் மிகவும் பலவீனமாக இருந்தால், ஈரத் துணி அல்லது மருந்து எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
மசாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிலர் மசாஜ் செய்யும் போது ஏற்படும் உராய்வை தவிர்ப்பதற்காக, டால்கம் பவுடரை பயன்படுத்துகின்றனர். இது உகந்தது அல்ல. இவ்வாறு செய்வதால் தோலில் காணப்படும் துளைகள் அடைபடும்.

மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்:
* காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் எவ்வித மசாஜும் செய்யக்கூடாது.
* கர்ப்பிணி பெண்கள் வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது.
* வயிற்றுப் போக்கு வாயுப் பிரச்சினை, அப்பென்டிசைட்டிஸ், சிறு குடலில் புண்கள் அல்லது வயிற்றில் கட்டி ஆகிய பிரச்னை உடையவர்கள் வயிற்றில் மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.
* தோல் வியாதி உடையவர்களுக்கு மசாஜ் செய்வது பொருத்தமற்றது.

ஏஞ்சலினா ஜோலி


 anje
அவர் ஏற்கனவே கதாநாயகிதான்  அதில் சந்தேகம் இல்லை அனால் அவர் உயர்ந்து நிற்பது வேறொரு காரணத்துக்காக  மார்பகப் புற்று நோய் தாக்கும் அபாயம் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து தன் இரு மார்பகங்களையும் அகற்றிக் கொண்டிருக்கிறார். ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. நடிகைகளின் மூலதனம் அழகுதான். ஆனால் சமூக அக்கறையோடு தன் சிகிச்சை விவரங்களை பகிர்ந்து கொண்டதில் தனித்துவம் காட்டியிருக்கிறார் ஏஞ்சலினா  இதோ அவர் எழுதிய கடிதம்
images (1)
” என் அம்மா புற்று நோயோடு பத்து ஆண்டுகள் போராடி மறைந்தார். என் முதல் குழந்தை மட்டுமே பாட்டியைப் பார்த்தது   மற்றவர்களுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை  பாட்டி எப்படி இறந்தார் என்று என் குழந்தைகள்  கேட்டபோது அவர் பட்ட வேதனைகளை விவரிப்பேன். உனக்கும் அப்படி ஆகுமா? என்று அவர்கள் கவலையோடு கேட்பார்கள். இல்லை என்று மறுப்பேன். ஆனால் உண்மை வேறாக இருந்தது. பி ஆர் சி எ 1 என்ற மரபணுவில் எனக்குக்  குறைபாடு இருந்தது. இதனால் எனக்கும் புற்றுநோய் தாக்கும் ஆவத்து இருந்தது. பாரம்பரிய மரபணுக்கள் காரணமாக புற்றுநோய் தாக்குவது கிரிந்த சதவீதம் என்றாலும் இந்த மரபணுக் குறைபாடு இருப்பவரிகளில் 65% பேருக்கு ரிஸ்க் இருப்பதால் டாக்டர்கள் அறிவுரை செய்தனர். நானும் அந்த சதவீதத்தில் அடங்குகிறேன்.
 images
இந்தப் பாதிப்பால் எனக்கு மார்பகப் புற்றுநோய் தாக்கும் ஆபத்து 87% இருப்பதாகவும் கருப்பை புற்றுநோய் தாக்கும் ஆபத்து 50% இருப்பதாகவும் தெரிய வந்தது. கடினமான முடிவுதான் என்றாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை  மூன்று மாத கால முன் தயாரிப்புகள் முடிந்து இதோ என் மார்பகங்களை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்  இந்த முடிவை நான் மகிழ்ச்சியாகவே எடுத்தேன்.  அதோடு எனக்கு நேர்ந்ததை ரகசியமாக வைத்திருக்க விரும்பவில்லை. புற்றுநோயின் நிழலில் தாங்கள் வாழ்கிறோம் என்பது தெரியாமலே பல பெண்கள் தங்கள் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள்.என் அனுபவத்திலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் புற்றுநோய் என்ற அரக்கனுக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் சக்தியிழந்து தவிக்கத் தேவையில்லை. இப்போது சாதாரண ரத்தப் பரீட்சை போதும் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம் சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன. எது தங்களுக்கு ஏற்றது என பெண்கள் தீர்மானிக்கலாம். தெளிவான முடிவை மன உறுதியோடு எடுத்தேன் என்பதில் நான் பெருமை படுகிறேன்.”
ஏஞ்சலினாவின் இந்தக் கடிதத்துக்குப் பிறகு உலகெங்கும் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அவர் எடுத்த் முயற்சியின் அடிநாதமே அதுதானே
 
http://chinnuadhithya.wordpress.com/2013/06/29/%E0%AE%8F%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/

மகாத்மா காந்தியின் அந்தரங்கம்! – (நாறியது காந்தி புகழ்!!)


மகாத்மா என்றும் தேசப் பிதா என்றும் போற்றப்படும் காந்தியை கடவுளுக்கு நிகராக கோவில்களிலும் கூட சிலையாக வைத்து  வழிபட்டு வருகிறார்கள் இந்திய மக்க ள்.    ஆனாலும், காந்தியின் அந்தரங்க பெண் உதவியாளர் மிருதுளா என்ற மனுபென் அப்போது எழுதிய பத்து டைரிகள் வலை த்தளங்களில் இப்போது சர்ச்சை யைக் கிளப்பி வருகின்றன. 
1943-ல் தொடங்கி, காந்தி சுடப்பட்டு இறந்த 1948, ஜனவரி 30-க்கு அடுத்த 22 நாட்கள் வரை  மனுபென் குஜராத்தி யில் எழுதிய 2000 பக்க குறிப்புக்கள் தற்போது கிடைத்திருக்கின்ற ன. ’பாபு என் தாய்’ என்று டைரியில் பாசம் பொங்க குறிப்பிட்டிருக்கு ம் மனுபென்னுக்கு காந்தி மறைந்தபோது வயது பதினெட்டோ பத்தொன்பதோ தானாம்.

காந்தியோடு மேற்கொண்ட நவகாளி யாத்திரையின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை மனுபென் விலாவாரியாக விவரித்திருக் கிறாராம்.   பிரம்மச்சரிய சோதனை என்ற பெயரில் 77 வயது காந்தி தன்னுடன் நிர்வாணமாக படுத்து உறங்கியதையெல்லாம் அந்தச் சிறு வயதுக்கே உரிய   வெள்ளந்தித்தனத்துடன் எழுதியிருக்கிறாரா ம் மனுபென். காந்தியைக் குளிப்பாட்ட தினசரி ஒரு பெண் வேண்டு மென்றும், அந்த நேரத்தில் அப் பெண் உடை அணிந்திருக் கக் கூடாது  என்பதும் ஒரு நடை முறையாகவே அப்போது கடைப்பிடிக்கப்பட்டு வந்ததாம் . அந்த இளம் வயதில் நிர்வாண நிலையிலும் தன்னிடம் உணர் ச்சி வசப்படாமல் பெண்கள் இருப்பதை சோதிக்கவே இப்ப டி ஒரு ஏற்பாட்டைச் செய்தா ராம் பாபுஜி. இது போன்ற பாலு ணர்வு பரிசோதனைகளை காந்தி  உடனே நிறுத்த வேண்டும் என்று  மொரார்ஜி தேசாயும் வல்லபபாய் பட்டேலும் கண்டித்து கடிதமெல் லாம் எழுதினார்களாம். 2000 பக்கங்களிலும் இப்படி என் னென்ன வோ எழுதித் தள்ளியிருக்கிறாராம் மனுபென்.
இதில் ஆச்சரியப்பட வேண்டியது என்னவென்றால், இந்த டைரிக் குறிப்புக்களை காந்தி சொல்லித்தான் மனுபென் எழுதினார் என்பத ற்கும் அதன் பக்கவாட்டில் காந்தியே கையெழுத்திட்டிருக்கிறார் என்பதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன என்று அடித்துச் சொல்வது தான்.
காந்திக்கு எதிரான கடும் விமர்சனக் கணைகள் அவர் காலத்திலிரு ந்தே பாயத் தொடங்கினாலும், தன்னை ஒரு பேத்தியாகவே நடத்தி னார் காந்தி என மனுபென்னும், காந்தியின் பார்வையோ அவரது தொடுதலோ ஓரு ஆண் மகனின் பார்வை யாகவோ, ஸ்பரிசமாக வோ ஒரு நாளும் இருந்ததில்லை என அவரது பெண் சீடர்களும், தனது ஆஸ்ரமத்தில் தங்கி சேவை புரியும் ஒரு பெண் எந்தச் சல னத்துக்கும் இடம் தராதவராக இருக்க வேண்டும் என்பதில் அதீத அக்கறை கொண்டவராக இருந்தார் காந்தி என்றும் வரலாறு பதிவு செய்திருக்கும் நிலையில்,   ‘இது என்ன கலாட்டா?’ என்று மகாத் மாவையே சந்தேகத்தோடு கலாய்க்கின்ற சங்கதிகளாக இவை வேறு புகுந்து புறப்பட்டிருப்பது சோதனைதான்..  அமரராகி விட்ட காந்திக்கு மீண்டும் ஒரு சத்திய சோதனைதான்!
-சி.என்.இராமகிருஷ்ணன், நக்கீரன்

பசுமை பரவல் திட்டம்


D.M.K

மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவர் - தம்
மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்.

# கருணாவுக்காகவே புலமைபித்தன் எழுதுன வரிகள் மாதிரி தெரியுது!

ரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அறிமுகம்…!

ரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடிவீடு கட்டலாம். ஏதோ ரியல் எஸ்டேட் விளம்பரம் என்று நினைக்க வேண்டாம். குறைந்த செலவில், நில நடுக்கத்தால் பாதிக்கப்படாத ஒரு பிளாட்டை புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கியிருக்கின்றனர், சென்னை ஐ.ஐ.டி., பொறியியல் துறையினர்.
 
அப்படி இந்த கட்டடத்தில் என்னதான் சிறப்பும் வித்தியாசமும் என்கிறீர்களா? இதன் மூலப் பொருட்கள் தான். முற்றிலும் வித்தியாசமான இதன் மூலப்பொருள் குறித்து பார்ப்போம்… 
 
ஜிஎப்ஆர்ஜி என்றால் என்ன? 
 
உரத் தொழிற்சாலைகளின் கழிவு பொருட்கள், கண்ணாடி இழைகள் மற்றும் ஜிப்சம் உப்பு ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையில் தயாரிக்கப்பட்ட (கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம்) ஜிஎப்ஆர்ஜி பலகைகள்,  இவற்றோடு குறைந்த அளவு சிமென்ட் மற்றும் மிகக் குறைந்த அளவு இரும்புக் கம்பிகள் இவற்றை வைத்து தான் ஐ.ஐ.டி., சிவில் இன்ஜினியரிங் துறையினர் இந்த மாதிரி வீட்டை அமைத்துள்ளனர். 
 
சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 1981 சதுர அடி அளவில் இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த மாதிரி வீட்டைக் கட்ட தேவைப்பட்ட கால அவகாசம் வெறும் ஒரு மாதம் தான். சொந்த வீடு என்பது கனவாகவே போய் விடுமா என்ற ஏக்கத்தில் இருக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு  இந்த புதிய தொழில் நுட்பம் நிச்சயம் பயன்படும் என்கின்றனர் பொறியாளர்கள்.
 
பரீட்சார்த்த முறையில் ஐ.ஐ.டி வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மாதிரி வீட்டை, பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயர் சமீபத்தில் திறந்து வைத்தார். 
 
 
ஐ.ஐ.டி,யின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தியின் வழிகாட்டுதலில் இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவந்த சென்னை ஐ.ஐ.டி.,பேராசிரியர்கள் டாக்டர் தேவதாஸ் மேனன் மற்றும் டாக்டர் மெஹர் பிரசாத் ஆகியோரிடம் நேயர்கள் மற்றும் வாசகர்கள் சார்பில்  நாம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
 
 
கேள்வி: சாதாரணமாக கட்டப்படும் வீடுகளை தவிர்த்து இந்த வீடுகளை கட்டுவதால் எவ்வளவு சேமிக்கலாம்?
 
பதில்: தற்போதைய சூழ்நிலையில் கட்டப்படும் வீடுகளின் செலவைக் காட்டிலும் இந்த ஜிப்சம் பலகை கொண்டு வீடுகட்டினால் 20 சதவீதம் வரை சேமிக்கலாம், தவிர இந்த மாதிரியான கட்டடங்களுக்கு பிளாஸ்டரிங் தேவைப்படுவதில்லை. குறைந்த நாட்களில் , குறைந்த அளவிலான பணியாளர்களைக் கொண்டு இந்தக் கட்டடங்களை கட்டிவிடலாம். 8 அடுக்கு மாடி கொண்ட குடியிருப்பை மரபு சார் கட்டடத்தைக் காட்டிலும் 50 சதவீதம் எடை குறைவானதாகவே அமைக்க முடியும். இதனால் அஸ்திவாரம் அமைப்பதற்கு ஆகும் செலவைக் குறைத்து அதிக அளவில் பணம் சேமிக்க இயலும்.
 
கேள்வி: கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம், இவை எங்கு கிடைக்கின்றன?
 
பதில்:இந்தியாவில் கேரள மாநில கொச்சியிலும், மும்பையிலும் கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகள் தயாரிக்கப்படுகின்றன. பொதுத்துறை உரத் தொழிற்சாலைகளான எஃப்.ஆர்.பி.எல்., கொச்சின், ஆர்.சி.எஃப்., மும்பை இவற்றை தயாரிக்கின்றன. எதிர்காலத்தில், தனியார் தொழிற்சாலைகளும் கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகள் தயாரிப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேனல்களின் விலை ஒரு சுதுர மீட்டர் ரூ.750 முதல் ரூ.900 வரை விற்கப்படுகிறது. ஜி.எஃப்.ஆர்.பி., (GFRG) கொண்டு கட்டப்படும் வீடுகள் நிலநடுக்கத்தால் பாதிக்காத வகையிலும், பூமியின் ஈர்ப்பாற்றலை தாங்கும் வகையிலும் இருக்கும். ஜி.எப்.ஆர்.ஜி பலகைகள் 12 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் 124 மிமீ கனம் கொண்டவையாக தயாரிக்கப்படுகின்றன. 
 
கேள்வி: உலகில் ஐ.ஐ.டியில்தான் முதன் முறையாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதா?
 
பதில்: ஆஸ்திரேலியா, சீனா, ஓமன் போன்ற நாடுகளில், கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகளை பயன்படுத்தி நிறைய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
 
கேள்வி: 6 லட்சம் ரூபாய்க்கு பிளாட் கிடைக்கும் என்பது கவர்ச்சிகரமாக இருந்தாலும், இந்த கட்டடங்களின் ஸ்திரத்தன்மை எப்படி இருக்கும்
 
பதில்: இந்த வகை கட்டடங்களின் ஸ்திரத்தன்மை, மரபு சார் கட்டடங்களுக்கு நிகரானதாக இருக்கும். ஒப்பிட்டுப் பார்க்கும் போது பராமரிப்புச் செலவு கனிசமாக குறைவு. சுற்றுச்சூழலுக்கு ஏற்றதான இவ்வகை கட்டடங்களை கட்ட மணல், சிமென்ட், தண்ணீர், இரும்பு எல்லாமே குறைவான அளவிலேயே தேவை. இவ்வகைக் கட்டடங்களின் கான்கிரீட் தட்பவெப்ப சூழலின் நேரடி தாக்குதலுக்கு ஆளாவதில்லை. இதனால் மரபுசார் கட்டடங்களைக் காட்டிலும், இவற்றின் ஸ்திரத்தன்மை பன்மடங்கு அதிகம்.
 
கேள்வி: ஜி.எஃப்.ஆர்.பி., (GFRG) பயன்படுத்தி சராசரியாக எத்தனை மாடிகள் எழுப்பலாம்?
 
பதில்: கட்டடம் அமைக்கப்படும் பகுதி, நிலநடுக்க அபாய வளைவில் (seismic zone) எந்த பட்டியலில் அமைந்திருக்கிறது என்பது முக்கியம். மிதமான நிலநடுக்கம் ஏற்படக் கூடிய ஜோன் 3  (moderate seismic risk) பகுதியில் 10 மாடிகள் கொண்ட அடுக்குமாடியை அமைக்கலாம். ஜி.எஃப்.ஆர்.பி., (GFRG) பேனல்களுடன் ஆர்.சி., ஷியர் வால்ஸ் (RC shear walls) எனும் மற்றுமொரு தொழில்நுட்பத்தை புகுத்தி 10க்கும் மேற்பட்ட மாடிகள் கொண்ட கட்டடத்தையும் எழுப்ப முடியும்.
 
கேள்வி: இதுபோன்ற வீடுகளை வீட்டுவசதி வாரியங்கள் கட்டுவதற்கு ஊக்குவிப்பீர்களா?
 
பதில்: குறைந்த செலவில் கட்டப்படும் இந்த மாதிரியான வீடுகளை அனைத்து மாநிலங்களிலும் உள்ள வீட்டுவசதி வாரியங்களும் பின்பற்ற உகந்தது. தொகுப்பு வீடுகள் கட்ட ஜி.எஃப்.ஆர்.பி., (GFRG) மிகவும் ஏற்புடையது. இருப்பினும் இவற்றை அமைப்பதில் தரம் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும். இதற்கான பிரத்யேக பணியாளர்களைக் கொண்டு நல்ல முறையில் திட்டத்தை செயல்படுத்துதல் அவசியம். எனவே வீட்டு வசதி வாரியங்கள் இவ்வகை வீடுகளை கட்டும் பட்சத்தில்  கட்டுமானப் பணிகளை நல்ல பயற்சி பெற்ற நிறுவனங்களுக்கு வழங்க வேண்டியது அவசியம்.
 
மணல் திருட்டை தடுக்க வேண்டும், நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும் இப்படி பல கட்டாயத்தில் இருக்கும் தருணத்தில் குறைந்த அளவு சிமெண்ட், குறைந்த அளவு இரும்பு, குறைந்த அளவு தண்ணீர், மிகக் குறைவான அளவில் மணல் கொண்டு நீண்ட காலத்துக்கு நீடித்து உழைக்கும் கட்டடங்களை கட்ட முடிந்தால் அது நிச்சயம் வரப்பிரசாதமாகத்தான் அமையும்… பார்ப்போம்!படம்